இலண்டனில்
உலகத் தமிழியல் ஆய்வுமாநாட்டை நடத்திய செல்வா. செல்லதுரை அவர்களுக்குப் பாராட்டு விழா
சென்னையில் 14.12.2013 இல் நடைபெறுகின்றது. மூத்த வழக்கறிஞர் இரா. காந்தி அவர்களின் தலமையில் நடைபெறும் விழாவில்
இரா. மதிவாணன் அவர்கள் வரவேற்புரை வழங்குகின்றார். முனைவர் ஔவை நடராசன், முனைவர் கோ.
விசயராகவன், முனைவர் மு.முத்துவேலு உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை
வழங்க உள்ளனர். இலண்டனில் வாழும் செல்வா. செல்லதுரை அவர்கள் ஏற்புரை வழங்குவார். நிகழ்ச்சி ஏற்பாடு: உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், இந்திய ஒன்றியம்.
உலகத் தமிழியல் ஆய்வுமாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகத் தமிழியல் ஆய்வுமாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 10 டிசம்பர், 2013
வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013
மு.இளங்கோவன் இலண்டன் செலவு...
இலண்டனில்14.08.2013 முதல் 18.08.2013 வரை உலகத் தமிழியல் ஆய்வுமாநாடு நடைபெறுகின்றது. இந்த
மாநாடு அறிஞர் தனிநாயகம் அடிகளார் அவர்களின் நூற்றாண்டினை நினைவுகூரும் வகையில் இலண்டன்
வாழ் தமிழ் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்டு ஆய்வுரைகள், கட்டுரைகள்
வழங்க உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஆய்வறிஞர்கள் வருகைதர உள்ளனர்.
இந்த
மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகத்தில் ஒலி ஒளி
ஆவணப்படுத்தும் முயற்சிகள் என்ற தலைப்பில் கட்டுரை வழங்க முனைவர் மு.இளங்கோவன்
செல்கின்றார். இலண்டனில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளில் உரையாற்றவும் இலக்கியச் சந்திப்புகள்
நிகழ்த்தவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழக நாட்டுப்புறப் பாடல்கள், தமிழ்
இணைய வளர்ச்சி, அயலகத் தமிழறிஞர்கள் குறித்த பொருண்மைகளிலும் பிற இடங்களில் மு.இளங்கோவன் உரையாற்ற
உள்ளார். தமிழ் இணைய நண்பர்கள் சந்திப்பு, வலைப்பூ நண்பர்களின் சந்திப்பு, முகநூல்
நண்பர்களின் சந்திப்பும் உண்டு.
மு.இளங்கோவனின்
இலண்டன் நிகழ்ச்சி நிரல் பற்றி அறிய muelangovan@gmail.com
என்ற தனி மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.
இலண்டன்
தொடர்புக்கு:
திரு.
தம்பு அவர்கள் 0044-1689857639
திரு. பாரிஸ் இராஜா
அவர்கள் 0044 - 7904509817
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)