நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
இரகமத் அறக்கட்டளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இரகமத் அறக்கட்டளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 ஜனவரி, 2011

சென்னை இரகமத் அறக்கட்டளையின் இசுலாமியப் புத்தக நிறுவனம் திறப்பு விழா


அழைப்பிதழ்

சென்னையில் உள்ள இரகமத் அறக்கட்டளையின் சார்பில் இசுலாமியப் புத்தக நிறுவனம் (ISLAMIC BOOK CENTRE ) திறப்பு விழா வரும் ஞாயிறு (09.01.2011) மாலை ஆறு மணிக்குச் சென்னைக் கதீட்ரல் சாலையில் உள்ள சோழா ஓட்டலில் நடைபெறுகின்றது.

பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் புத்தக நிறுவனத்தைச் சந்திரயான் திட்ட இயக்குநர் அறிவியலாளர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் திறந்து வைக்கின்றார்கள்.

கவிக்கோ அப்துல் இரகுமான், கவிப்பேரரசு வைரமுத்து, பேராசிரியர் மேத்தா, பேராசிரியர் ஈரோடு தமிழன்பன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசுகின்றனர்.

வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் அப்துல் அமீது அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகின்றார்.

மௌலவி சா.யூசுப் சித்தீக் மிசுபாகி அவர்கள் நன்றியுரை வழங்குவார்.