ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம் சார்பில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் ஆவணப்படம் வெளியீடு



     இருபதாம் நூற்றாண்டில் தமிழிசைக்கு ஏற்றம் சேர்த்த பெருமக்களுள் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை . சுந்தரேசனார் குறிப்பிடத்தக்கவர். இவர்தம் வாழ்க்கையையும் தமிழிசைப் பணிகளையும் முனைவர் மு.இளங்கோவன் ஆவணப்படமாக்கி, உலகின் பல பகுதிகளிலும் திரையிடுவதற்கு வாய்ப்பமைத்துள்ளார். ஈராயிரம் ஆண்டு வரலாறுகொண்ட தமிழ்ப் பண்ணிசையின் சிறப்பினை அறிவதற்குப் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம் சார்பில் வெளியிடப்படவும் திரையிடப்படவும் உள்ளது. தமிழார்வலர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

அழைப்பில் மகிழும்
திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம்

நாள்: 04.04.2017 செவ்வாய்க்கிழமை/நேரம் : மாலை: 6 மணிமுதல் 8 மணி வரை
இடம்  : திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க வளாகம்,
             62, அப்பாச்சி நகர் மெயின் ரோடு,   கொங்கு நகர் , திருப்பூர் - 641 607

நிகழ்ச்சி நிரல்


வரவேற்புரைதிரு.T.R. விஜயகுமார் அவர்கள்
                           பொதுச்செயலாளர் , திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்

ஆவணப்படம் வெளியீடு   : திரு.K.P.K.செல்வராஜ்  அவர்கள்
                       தலைவர்,    திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம்

முதல்படி பெறுதல் : திரு.ராஜா.M.சண்முகம் அவர்கள்
                                   தலைவர் , திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்
  
சிறப்புரை  : முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்

நன்றியுரை : Rtn. K.P.K.பாலசுப்ரமணியன் அவர்கள்
 செயலாளர், திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக