திங்கள், 3 அக்டோபர், 2016

பூம்புகாரின் வரலாற்று எச்சங்கள் – புலவர் நா. தியாகராசன் அவர்களின் காணொளி உரை


தமிழார்வலர்களின் கவனத்திற்கு!


பூம்புகாரை அடுத்துள்ள மேலப்பெரும்பள்ளத்தில் வாழ்ந்துவரும் புலவர் நா. தியாகராசன் அவர்கள் இலக்கிய ஈடுபாடும், வரலாற்று ஈடுபாடும் கொண்டவர்கள். வரலாற்றுச் சிறப்பு மிக்க பூம்புகாரின் சிறப்பினை அறிந்தவர். பூம்புகார் சார்ந்த ஊர்களின்இடங்களின் வரலாறுகளைத் துல்லியமாக அறிந்துவைத்துள்ளவர். அவரிடம் அமைந்த நேர்காணலை ஒளிப்பதிவாக்கித் தமிழர்களின் ஆவணமாகத் தருவதில் மகிழ்கின்றோம். தங்களின் ஊக்கமொழிகள் எங்களை மேலும் வழிநடத்தும். எம் முயற்சியினை நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.

காணொளியின் பயன்துய்க்க இங்கே சொடுக்கவும்

1 கருத்து:

  1. தமிழுக்கும், வரலாற்றுக்கும் புகழ் சேர்க்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன். மிக நுட்பமாக, அவசியம் காணவேண்டியனவற்றை எங்கள் முன் கொணர்ந்தீர்கள். நேரில் சென்றால்கூட இவ்வளவு துல்லியமாகக் காணமுடியாது. நான் பார்க்க ஆசைப்பட்ட இடங்களை கண்முன் கொண்டுவந்தததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு