வியாழன், 29 செப்டம்பர், 2016

கோமேதகவல்லி செல்லத்துரை அவர்களுடன் நேர்காணல்…


கண்ணம்மை அக்கா எனப்படும் கோமேதகவல்லி

தவத்திரு விபுலாநந்த சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை அறிவதற்கு இலங்கையின் மட்டக்களப்பை அடுத்துள்ள காரைதீவில் வாழ்ந்துவரும் கண்ணம்மை அக்கா அவர்களைச் சந்திக்கச் சென்றிருந்தேன். இவரின் இயற்பெயர் கோமேதகவல்லி என்பதாகும். 87 அகவையாகும் இவர் விபுலாநந்தரின் தங்கை மகள் ஆவார். சுவாமிகளின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளச் சொன்னவுடன் இனிய நினைவுகளை நினைத்து நினைத்துப் பகிர்ந்துகொண்டார். சுவாமிகளின் தாயார் பெயர் கண்ணம்மை என்பதால் கோமேதகவல்லி என்ற தம் இயற்பெயரைச் சொல்லாமல் கண்ணம்மை என்றே சுவாமிகள் அழைப்பாராம். தமக்குச் சுவாமிகள் பல கடிதங்கள் எழுதிப் படிக்கவும், முன்னேறவும் செய்துள்ளதை மகிழ்ச்சிபொங்க எடுத்துரைத்தார். சுவாமிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு, கொழும்புவில் தங்கியிருந்தபொழுது நேரில் பார்த்த சான்றாக இவர் உள்ளார். அதுபோல் சுவாமிகளின் உயிர் பிரிந்து, உடலை மட்டக்களப்புக்குக் கொண்டுவந்து அடக்கம்செய்தபொழுது இறுதிக்கடன்களிலும் இவர் பங்குகொண்டுள்ளார். கண்ணம்மை அக்காவுடன் உரையாடிய விவரங்களை நேரம் அமையும்பொழுது விரிவாக எழுதுவேன்.


நன்றி: சிவம் வேலுப்பிள்ளை, காசுபதி நடராசா

2 கருத்துகள்:

  1. தங்களின் தேடலும்
    அயரா உழைப்பும்
    போற்றுதலுக்கு உரியது ஐயா

    பதிலளிநீக்கு
  2. தங்களின் தேடலுக்கு பாராட்டுகள். இது தொடர்பான தொடர் பதிவுக்குக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு