செவ்வாய், 12 ஜூலை, 2016

எழுத்துச் செம்மல் வேலூர் தெ. சமரசம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுக் கருத்தரங்கம்



வேலூரில் வாழ்ந்த பகுத்தறிவுச் சிந்தனையாளரும் வழக்கறிஞரும் தமிழ்ப்பற்றாளருமாகிய எழுத்துச்செம்மல்  தெ. சமரசம் ஐயா அவர்கள் மறைந்து ஓராண்டாகின்றது. அன்னாரின் நினைவினைப் போற்றும் வகையில் அவர்தம் குடும்பத்தாரும், நண்பர்களும் நினைவுக் கருத்தரங்கம் ஒன்றினை வேலூரில் 17.07.2016 (ஞாயிறு)  அன்று காலை 10 மணிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.


கல்விச்செம்மல் த. வ. சிவசுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சிக்குச் சிறப்பு அழைப்பாளராக வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் கோ. விசுவநாதன் அவர்கள் அழைக்கப்பட்டுள்ளார். தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் கலந்துகொள்ளும் இவ்விழாவிற்குத் தமிழார்வலர்களை அன்புடன் அழைக்கின்றோம். பயண நூல்கள் பலவற்றைத் தந்த பகுத்தறிவுப் பெருமகனாரின் நினைவுகளை நெஞ்சில் ஏந்துவோம்!

தொடர்புடைய பதிவுகள்:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக