புதன், 3 பிப்ரவரி, 2016

உலகத் தொல்காப்பிய மன்றம் – புதுச்சேரிக் கிளை, தொல்காப்பியத் தொடர்ப்பொழிவு



அன்புடையீர்! வணக்கம்.


தமிழின் சிறப்புரைக்கும் ஒல்காப் பெரும்புகழுடைய தொல்காப்பியத்தைப் பரப்புதற்கு உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இம்மன்றத்தின் கிளைகள் பல நாடுகளில் உள்ளன. உலகத் தொல்காப்பிய மன்றத்தின் புதுச்சேரிக் கிளையின் சார்பில் ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியத் தொடர்ப்பொழிவு நடைபெற உள்ளது. தாங்கள் முதல் பொழிவில் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.


நாள்: 08. 02. 2016, திங்கள் கிழமை, நேரம்: மாலை 6.30 மணி முதல் 7.30
இடம்: செகா கலைக்கூடம் (Sega Art Gallery), நீட இராசப்பையர் தெரு, புதுச்சேரி

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து:

வரவேற்புரை: முனைவர் ப. பத்மநாபன் அவர்கள்

நோக்கவுரை: முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்

முன்னிலை: புரவலர் அரங்க. மாரிமுத்து அவர்கள்

சிறப்புரை: முனைவர் தெ. முருகசாமி அவர்கள்,

மேனாள் முதல்வர், இராமசாமி தமிழ்க் கல்லூரி, காரைக்குடி

நன்றியுரை: திரு. செ. திருவாசகம் அவர்கள்


அனைவரும் வருக!

அழைப்பில் மகிழும்
உலகத் தொல்காப்பிய மன்றம்
புதுச்சேரிக் கிளை
............................................................................................................................................................ 
தொடர்புகொள்ள:

முனைவர் ப. பத்மநாபன் + 9443658700 / திரு செ. திருவாசகம் + 9585509560 /
முனைவர் மு.இளங்கோவன் + 9442029053

1 கருத்து: