சனி, 20 டிசம்பர், 2014

முஸ்தபா தமிழ் அறக்கட்டளை நடத்தும் கவி கா.மு. ஷெரீப் நூற்றாண்டு விழா




  திரைப்பா ஆசிரியரும் தமிழ் இலக்கியப் பணிகளில் தம்மை இணைத்துக்கொண்டு மிகச் சிறந்த பணிகளைச் செய்தவருமான கவி. கா. மு. ஷெரீப் அவர்களின் நூற்றாண்டு விழா 26.12.2014 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குச் சென்னை, அண்ணா மேம்பாலம் அருகில் அமைந்துள்ள இராணி சீதை மன்றத்தில் நடைபெறுகின்றது.

  பேராசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் தலைமையில் நடைபெறும் விழாவில் குமரி அபூபக்கர், முகேஷ் குழுவினரின் இசை அரங்கம் நடைபெறுகின்றது.

  ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் வரவேற்புரையாற்ற, திருவாளர்கள் வீரபாண்டியன், காவ்யா சண்முகசுந்தரம், தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கருத்துரை வழங்க உள்ளனர்.

  தமிழ்வள்ளல் சிங்கப்பூர் எம். ஏ. முஸ்தபா அவர்கள் கவி கா.மு. ஷெரீப் குறித்த நூல்கள், மலர்களை வெளியிட, கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் நூல்களைப் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றுகின்றார். பி. எச். அப்துல் ஹமீது அவர்கள் தொகுப்புரை வழங்க உள்ளார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முஸ்தபா தமிழ் அறக்கட்டளையும், கலாம் பதிப்பகத்தினரும் செய்துள்ளனர்.


தொடர்புக்கு: 94440 25000

2 கருத்துகள்: