திங்கள், 4 ஆகஸ்ட், 2014

கண்ணகித் திருநாள், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் நூற்றாண்டு விழா - பூம்புகார்



பூம்புகாரில் அமைந்துள்ள பத்தினிக்கோட்டத்தில் 2014 ஆகத்து 5, 6 நாள்களில் கண்ணகித் திருநாள் நடைபெறுகின்றது. 05. 08. 2014 காலை 10 மணிக்குக் கல்லூரி மாணவர்களுக்கான சிலப்பதிகாரம் இசைப்போட்டித் தேர்வு நடைபெறும். மாலை 6 மணிக்கு மேல் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழா நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கு மேனாள் வானொலி நிலைய இயக்குநர் காத்த. துரைசாமி அவர்கள் தலைமை தாங்குகின்றார். பேராசிரியர் மா.வயித்தியலிங்கம், திரு. மா. கோடிலிங்கம், முனைவர் மு.இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டு பண்ணாராய்ச்சி வித்தகர் குறித்த நினைவுரையாற்ற உள்ளனர்.

 மறுநாள் (06.08.2014) பத்தினிக்கோட்ட அறநிலையின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் திரு. அரு.சோமசுந்தரம், திருமதி பெ. வனிதா, செந்தமிழ்ப் புரவலர்  இரா. இராஜசேகரன், பேராசிரியர் தி.இராசகோபாலன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.

 தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.

1 கருத்து: