கிருட்டினகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இன்று(18.12.2009)பிற்பகல் இரண்டு மணிமுதல் நான்கு மணிவரை தமிழ் இணையம் அறிமுகமும் இணையப் பயிற்சியும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அருகில் உள்ள பதிவர்கள்,தமிழ் இணைய ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.அண்மையில் தமிழ்நாட்டு அரசு இந்தப் பள்ளியில் கணிப்பொறித் துறைக்கான மிகச்சிறந்த ஆய்வுக்கூட வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளது.இந்த நிகழ்வு அதில் நடைபெறும் முதல் நிகழ்வாகும்.புதுச்சேரியிலிருந்து நான் கலந்துகொள்கிறேன். மாணவர்களுக்குப் பயிற்சி வழங்குகிறேன்.அரங்கிலிருந்து சந்திப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக