tag:blogger.com,1999:blog-6619641432886465518.post5966707573943268853..comments2024-03-27T09:08:48.728+05:30Comments on முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: தமிழ்த்தூதர் சேவியர் தனிநாயகம் அடிகளார்(02.08.1913- 01.09.1980)முனைவர் மு.இளங்கோவன்http://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6619641432886465518.post-43267464773392897432008-12-07T19:37:00.000+05:302008-12-07T19:37:00.000+05:30அன்புள்ள பேராசிரியர் அவர்களுக்குவணக்கம்.கட்டுரை பற...அன்புள்ள பேராசிரியர் அவர்களுக்கு<BR/>வணக்கம்.<BR/>கட்டுரை பற்றி கருத்துரைத்தமைக்கும்,<BR/>பழைய வரலாற்றை நினைவுகூர்ந்தமைக்கும் நன்றியன்.<BR/>தொடர்ந்து கருத்துரை வழங்கி என்<BR/>முயற்சியை ஊக்கப்படுத்துங்கள்.<BR/><BR/>அன்புள்ள<BR/>மு.இளங்கோவன்<BR/>புதுச்சேரி,இந்தியாமுனைவர் மு.இளங்கோவன்https://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-44398147053536083662008-12-07T18:59:00.000+05:302008-12-07T18:59:00.000+05:30இளங்கோவன்,இதை முன்னமே சொல்ல நினைத்து மறந்தேன். தாம...இளங்கோவன்,<BR/><BR/>இதை முன்னமே சொல்ல நினைத்து மறந்தேன். தாமதமாகப் பின்னூட்டம் இடுவதற்கு மன்னிக்க. <BR/><BR/>கட்டுரை அருமை. மிகப் பயனுள்ளது. எனக்குப் பல இனிய நினைவுகளைத் தூண்டுவது.<BR/><BR/>நான் தனிநாயகம் அடிகளாரின் மாணவன். 1968இல் மலாயாப் பல்கலைக் கழகத்தில் நான் இளங்கலைப் பட்டம் வாங்கியது அவரிடமே. எனக்கு external examiner ஆக பேராசிரியர் மு.வ.இருந்ததும் நான் பெருமையோடு எண்ணிப் பார்க்கும் ஒன்று. இந்த இரண்டு பேரும் என் விடைத்தாள்களைப் பரிசீலித்து எனக்கு முதல் வகுப்புப் பட்டம் கொடுத்தார்கள். அடிகளாரின் துறைத் தலைமைத்துவம் முழுவதிலும் அவர் கொடுத்த ஒரே முதல் வகுப்புப் பட்டம் எனக்குத்தான். பெருமைக்காகச் சொல்லவில்லை. அருமைக்காகச் சொன்னேன்.<BR/><BR/>முதல் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடக்கும்போது நான் அங்கே மாணவன். மாநாட்டுக் கட்டுரைகள் பெரும்பாலானவற்றுக்குச் சுருக்கம் எழுதி அவற்றை மலேசியத் தமிழ்ப் பத்திரிக்கைகளில் பிரசுரிக்க நான் காரணமாக இருந்தேன். அடிகளாரின் பாராட்டையும் பெற்றேன். <BR/><BR/>அடிகளார் பல ஆண்டுகள் இந்திய இயல் துறைக்கு மட்டுமல்லாது கலை, சமூகவியல் பிரிவுக்கு டீனாக இருந்தும் வழி நடத்தினார். அப்பழுக்கில்லாத ஆங்கிலம் பேசுவார். நெடிய தோற்றம். எப்போதும் கோட்டுடனும் பாதிரியாருக்கான வட்டக் காலருடனும் இருப்பார். கம்பீரமான நடை. எங்கள் பல்கலைக் கழகத்தின் அலுவலர் (பல இனத்தினர்) அனைவரும் அவரை மிகவும் மதித்தார்கள்.<BR/><BR/>அடிகளாரின் சமகாலத்தவராக கணிதப் பேராசிரியர் எலீசர் (தமிழர்; தமிழாராய்ச்சி மாநாட்டில் "சுழியம்" பற்றி ஒரு கட்டுரை படைத்தார்) மற்றும் வரலாற்றுப் பேராசிரியர் அரசரத்தினம் ஆகியோர் இருந்தனர். அரசரத்தினம் தமிழ்நாட்டு வரலாற்று வல்லுநர். பின்னர் ஆஸ்த்திரேலியாவில் (ANU) பணியாற்றி ஓய்வு பெற்றார்.<BR/><BR/>அடிகளாரின் சமகாலத்தவரான இன்னொரு வரலாற்றுப் பேராசிரியர் வாங் கங் வூ (சீனர்). இவர் பின்னாளில் ஹோங் கோங் சீனப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்தார். இப்போது சிங்கப்பூரில் இருக்கிறார் என்று கேள்வி. <BR/><BR/>மிக உன்னதமான அறிஞர்கள் கோலோச்சிய காலம் அது.<BR/><BR/>மறக்க முடியாது.<BR/><BR/>ரெ.கா.Karthigesuhttps://www.blogger.com/profile/12792444867069072539noreply@blogger.com